search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஆஸ்பத்திரி"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #sterliteprotest
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜலிங்கம் (வயது 38), வீரபாபு (17), காளிமுத்து (32), சக்திவேல் (34) ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனிப்பிரிவில் சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #sterliteprotest
    ×